சூதாட்ட செயலிகளை ஊக்குவித்த வழக்கு: நடிகர் ராணா ஆஜர் ஆகவில்லை

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சூதாட்ட செயலிகளை ஊக்குவித்த வழக்கு: நடிகர் ராணா ஆஜர் ஆகவில்லை
Published on

ஐதராபாத்,

ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதில், பிரபல நடிகர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதால் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து 29 நடிகர்- நடிகைகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் 23-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்தவாரம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நடிகர் ராணா நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜராவதை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் ஆகஸ்டு 11-ந்தேதி ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகிற 30-ந்தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்டு 6-ந்தேதியும், நடிகை லட்சுமி மஞ்சு ஆகஸ்டு 13-ந்தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com