'கடைசி உலகப் போர்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
'கடைசி உலகப் போர்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
Published on

சென்னை,

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிடி சார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'கடைசி உலகப் போர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

'கடைசி உலகப் போர்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com