'கில்லி' மறு வெளியீட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு - விஜய்யிடம் விநியோகஸ்தர் வைத்த கோரிக்கை

படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை இன்று நேரில் சந்தித்தார்
'கில்லி' மறு வெளியீட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு - விஜய்யிடம் விநியோகஸ்தர் வைத்த கோரிக்கை
Published on

சென்னை,

தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 2004 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய், பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் என படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜுனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.கில்லி திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. கில்லி மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கில்லி மறு வெளியீட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து மாலை அணிவித்தார். பின்னர், "அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால், வருடத்துக்கு ஒரு படமாவது பண்ண வேண்டும்  என விஜய்யிடம் அவர் கோரிக்கை வைத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com