'மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பும் திட்டம் இல்லை' - நடிகை பிரியங்கா குமார்

'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார்.
'I have no plans to return to TV' - Priyanka Kumar
Published on

சென்னை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார். இத்தொடரில் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்காவின் புதிய பட வாய்ப்புகளை அவரின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். நடிகை பிரியங்கா குமார் ஏற்கெனவே அதுரி லவ்வர், ருத்ர கருட புராணம் ஆகிய தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 3வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். எனினும் இம்முறை கன்னடத்தில் அறிமுகமாகிறார்.

இதில் பிரியங்காவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனர் மன்சோரே இயக்க உள்ள இப்படத்தில் புல்லாங்குழல் கலைஞராக பிரியங்கா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மீண்டும் சின்னத்திரைக்கு க்கு திரும்பும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனது இலக்கு எப்போதும் சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு செல்வதே. அதை நான் இப்போது அடைந்துவிட்டேன். இப்படத்திற்காக மைசூருவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பாலுவின் வழிகாட்டுதலின் கீழ் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொள்ளவும் உறுதியான நடிப்பை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறேன். இசைக்கருவியில் தேர்ச்சி பெறுவது ஒரு பயணம். இதில், மூச்சுக் கட்டுப்பாடு நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கிறது, ஆனால் பயிற்சி செய்வதால் அது சவாலாக இருக்காது என்று நம்புகிறேன்,' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com