

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் குறித்து மலையாள லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா கூறிய கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய சுவாசிகா, “நடிகர் விஜய்யை மலையாள சினிமாவுக்கு தூக்கிட்டு போக ஆசை ” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழ் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதனால் மலையாள சினிமாவிற்கு வாங்க. நாங்கள் உங்களை கொண்டாடுவோம்” என்றார். அவரது இந்த பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டல்களால் முழங்கியது.
அதே நேரத்தில், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான்” என்றும் கூறினார். நடிகை சுவாசிகாவின் இந்த பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.