ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி பல தகவல்களை கூறுவேன் - நடிகர் ஆனந்த்ராஜ்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி பல தகவல்களை கூறுவேன் என நடிகர் ஆனந்த்ராஜ் கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி பல தகவல்களை கூறுவேன் - நடிகர் ஆனந்த்ராஜ்
Published on

சென்னை

நடிகர் ஆனந்த்ராஜ் ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசியாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிப் பணியில் இருந்து விலகியே இருந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவர், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனபின் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த் ராஜ் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் ஆஜராகி பல்வேறு தகவல்களை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com