நடிகர் மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
Published on

சென்னை,

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மன்சூர் அலிகானிடம் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து 35 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. அதில், உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரா என்பது தெடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com