

மும்பை,
நடிகை ஜான்வி கபூர் தனது டீன் வயதில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 15 வயதில், தன்னைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட டீப்பேக் புகைப்படம் ஒரு ஆபாச இணையதளத்தில் இருந்ததை அவர் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “நான் ஒரு ஆபாச இணையதளத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்தேன். பள்ளியில் ஐடி வகுப்பின்போது இந்த சம்பவம் நடந்தது. சில மாணவர்கள் அந்த வகுப்பில் அந்த மாதிரியான இணையதளங்களைப் பார்த்துகொண்டிருந்தார்கள். அப்போது என் படங்கள் அங்கே இருந்தன. அது உண்மையா அல்லது டீப்பேக்கா என்று அப்போது எனக்கு தெரியவில்லை” என்றார்.
சில நேரங்களில் அதிகாரபூர்வ செய்தி பக்கங்களில்கூட அவர் அணியாத உடைகள் அல்லது செய்யாத போஸ்களில் உருவாக்கப்பட்ட படங்கள் பகிரப்படுவதாகவும், இதனால் மனஅமைதியற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜான்வி கபூர், கடைசியாக சன்னி சங்கரி கி துளசி குமாரி படத்தில் நடித்திருந்தார். ஷஷாங்க் கைதான் இயக்கிய இப்படத்தில் வருண் தவான், சன்ய மல்கோத்ரா மற்றும் ரோகித் ஷராப் ஆகியோரும் நடித்துள்ளனர்.