ஜேசன் விஜய்யின் “சிக்மா” படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஜேசன் விஜய்யின் “சிக்மா” படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு
Published on

‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ திரைப்படம் குறித்து “இப்படம் எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ‘சிக்மா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் கடந்த ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com