3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் கலவையான விமர்சனங்களையும் கூறியுள்ளனர். இப்படம் முதல் நாளில் ரூ.10 வசூல் செய்தது.
இந்நிலையில், ‘காந்தா’ படம் 3 நாட்களில் ரூ 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






