தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் கமல் வழக்கு


தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் கமல் வழக்கு
x

அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை கமல் தயாரிக்க உள்ளார்.

கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றை தனது அனுமதி இன்றி யாரும் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். அதில் சென்னையில் உள்ள ‘நீயே விடை’ நிறுவனம், அவரது அனுமதியின்றி அவரது உருவம் மற்றும் திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளை விற்பனை செய்வதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற செயல்கள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாரேனும் தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் வகையில் பொதுவான ஒரு தடையை அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி நாளை விசாரிக்க உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் ,அபிஷேக் பச்சனும் இதேபோன்ற வழக்கை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்து தடை உத்தரவுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story