3 நாட்களில் ரூ. 235 கோடி வசூலித்த “காந்தாரா சாப்டர் 1”


3 நாட்களில் ரூ. 235 கோடி வசூலித்த “காந்தாரா சாப்டர் 1”
x
தினத்தந்தி 5 Oct 2025 11:59 PM IST (Updated: 10 Oct 2025 1:35 PM IST)
t-max-icont-min-icon

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் 3 நாட்களில் ரூ. 235 கோடி வசூலித்துள்ளது.

கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ படம் 3 நாட்களில் உலக அளவில் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளது.

1 More update

Next Story