கங்கனா ரனாவத்துக்கு "பத்மஸ்ரீ" விருது: ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்

கங்கனா ரனாவத் "பத்மஸ்ரீ" விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
கங்கனா ரனாவத்துக்கு "பத்மஸ்ரீ" விருது: ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்
Published on

புதுடெல்லி,

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. இந்த விருதினை 29 பெண்கள் பெற்றுக்கொண்டனர். அதில் கங்கனா ரனாவத்தும் ஒருவர் ஆவார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் கங்கனா ரனாவத், பத்மஸ்ரீ விருதினை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார். விருது பெற்றுக்கொண்ட பின் அவர் கூறியதாவது,

நான் எனது பயணத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கினேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அட்னன் சாமியின் பாடல்களைக் கேட்காதவர் யார்? என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு அவர்களுடன் பத்மஸ்ரீ விருது கிடைப்பது பெருமைக்குரிய விஷயம். என்று கங்கனா ரனாவத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com