கணவர் மீது நடிகை வழக்கு: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

நடிகை சைத்ரா தொடர்ந்த வழக்கில் கணவர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது..
கணவர் மீது நடிகை வழக்கு: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
Published on

பிரபல கன்னட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர் 'குரு சிஷ்யரு', 'ஸ்ரீதனம்மா தேவி' உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். பாலாஜி என்பவரை சைத்ரா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கணவரும், மாமனாரும் தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்து இருந்தார். இதுகுறித்து பெங்களூரு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கும்படி கணவர் பாலாஜியும், அவரது தந்தையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த கோர்ட்டு சைத்ரா வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

சமீபத்தில் கணவரும், மாமனாரும் தனது வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடியாக நகைக்கடன் பெற்று இருப்பதாக மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் இன்னொரு புகாரும் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com