ஆலியா பட், ரன்வீர் சிங் குறித்து இயக்குனர் கரண் ஜோகரின் இன்ஸ்டா பதிவு

ஆலியா பட், ரன்வீர் சிங் நடிப்பில் கரண் ஜோகர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் ஆகிறது.
ஆலியா பட், ரன்வீர் சிங் குறித்து இயக்குனர் கரண் ஜோகரின் இன்ஸ்டா பதிவு
Published on

மும்பை,

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கரண் ஜோகர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் இவர் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள். இவர் 'காபி வித் கரண்' என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. இந்தப்படத்தில் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில், இது குறித்த பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் " நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! இந்தப்படம் இந்தி சினிமாவின் கொண்டாட்டமாக இருந்தது, இந்தப்படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் என் வாழ்க்கையையும் வேலையையும் மிகவும் எளிதாக்கினார்கள், நான் உங்கள் இருவரையும் நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படத்தில் மாமியாராக நடித்த ஜெயா பச்சனுக்கு நன்றி தெரிவித்தார். ஷபானா ஆஸ்மி மற்றும் தர்மேந்திரா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார், மேலும், "படத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் இருக்கும் தனது குழுவினர் இல்லாமல் நாங்கள் இருந்திருக்கவே மாட்டோம்" என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com