ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.
ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு..!
Published on

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கும் படத்தில் நடித்தவர்கள் நடிகர்களுக்கும் திரைத்துறையினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை ரஜினிகாந்த் பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தியை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் வேலையைப் பாராட்டுவதற்கு அவர்களைச் சென்றடையும் உங்கள் மரியாதை மற்றும் நீங்கள் எங்களுக்குத் தரும் மகிழ்ச்சி எப்போதும் அன்பு நிறைந்ததாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், "கமல் சார், சினிமாவில் பெரிய இலக்குகளை அடைவதற்கும் உயர்ந்த தரத்தை அமைக்கவும் நீங்கள் எப்பொழுதும் எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக இது போன்ற தருணங்களில் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com