கார்த்தியின் 30வது படத்தின் பூஜை

நடிகர் கார்த்தியின் 30வது படத்தை கல்யாண் சங்கர் இயக்குகிறார்.
கார்த்தியின்  30வது படத்தின் பூஜை
Published on

கார்த்தி, மீனாட்சி சௌத்ரி நடிப்பில் கல்யாண் சங்கர் இயக்கும் ‘கார்த்தி 30’ பட அறிவிப்பு கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியானது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இப்படத்தை தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கிறது.

தெலுங்கில் ‘மேட்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கல்யாண் சங்கர். முதல் படத்திலேயே பெரிய ஹிட் படத்தை கொடுத்த இவர், இப்போது கார்த்தியின் 30வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கார்த்தியின் ‘சர்தார் -2’ திரைப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது பெரிய பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது.

நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது.சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது. ஐதாபாத்தில் இன்று நடந்த படப் பூஜையில் 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ, மீனாட்சி சௌத்ரி, சுனில் மற்றும் தயாரிப்பாளர் எனப் பலரும் பங்கேற்றனர். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக விருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com