நடிகர் திலீப்புக்கு கோர்ட்டு முன்ஜாமீன்

நடிகை ஒருவரின் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பிற்கு நிபந்தனைகளுடுன் கூடிய முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலீப்புக்கு கோர்ட்டு முன்ஜாமீன்
Published on

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மற்றும் அவரது சகோதரர் அனூப் உள்பட 6 பேர் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திலீப் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 10-ந்தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் உள்ளிட்ட 6 பேரும் மனுதாக்கல் செய்தனர். திலீப்புக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு திலீப் நேரில் ஆஜரானார். திலீப்பின் செல்போன்களும் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கேரள உயர்நீதி மன்றத்தில் நடந்தது. அப்போது நடிகர் திலீப் உள்பட 6 பேரும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். திலீப்பை கைது செய்ய அவரது வீட்டின் முன்னால் காத்திருந்த போலீசார் ஜாமீன் வழங்கப்பட்டதால் திரும்பி சென்றனர். திலீப்புக்கு வழங்கிய முன்ஜாமீனை எதிர்த்து சுப்ரீம்கோட்டில் மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com