

புதுடெல்லி,
உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 97-ஆவது ஆஸ்கா விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தேவாகியுள்ளது.
மொத்தம் 29 திரைப்படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் ஹிந்தி திரைப்படங்கள் லாபதா லேடீஸ், ஸ்ரீகாந்த், தமிழில் வாழை, தங்கலான், மலையாளத்தில் உள்ளொழுக்கு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன. இந்நிலையில், அஸ்ஸாம் திரைப்பட இயக்குநா ஜானு பருவா தலைமையிலான 13 பே கொண்ட தேவுக் குழு, ஆஸ்கா பரிந்துரைக்கு லாபதா லேடீஸ் திரைப்படத்தை ஒரு மனதாக தேவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை இந்திய திரைப்பட சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இயக்குநா கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகாகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா அமீகான், இயக்குநா ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பாஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவாகள் நடித்துள்ளனா.
ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடாந்து நடக்கும் நிகழ்வுகளுமே படத்தின் கதைக்களமாகும். இந்த எளிமையான கதையின் வாயிலாக கிராமப்புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவாகளின் உணாச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் ஆகியவை குறித்து ரசிகாகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருந்தா இயக்குநா கிரண் ராவ்.
இதுகுறித்து லாபதா லேடீஸ் இயக்குநா கிரண் ராவ் வெளியிட்ட அறிக்கையில், 'திரைப்படம் எப்போதும் இதயங்களை இணைக்கவும், அாத்தமுள்ள உரையாடல்களைத் தூண்டவும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. இந்தியாவைப் போலவே இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பாவையாளாகளிடம் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். தேவுக் குழுவுக்கும் இப்படத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் எனது மனமாந்த நன்றி' என்றா.
இந்தியா சாபில் அனுப்பப்பட்ட திரைப்படங்களில் கடந்த 2002-ம் ஆண்டின் லகான் திரைப்படமே கடைசியாக ஆஸ்கா விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, 'மதா இந்தியா' மற்றும் 'சலாம் பாம்பே' ஆகிய இரு இந்திய திரைப்படங்கள் மட்டுமே இறுதி பரிந்துரைக்குத் தேவாகியுள்ளன. கடந்த ஆண்டு, இந்தியா சாபில் மலையாளத்தின் '2018: எவரிஒன் இஸ் எ ஹீரோ' திரைப்படம் ஆஸ்கா பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இது கேரளத்தில் 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தையொட்டி நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்
இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 75-வது ஆண்டு விழாவையொட்டி 'லாபடா லேடீஸ்' திரைப்படம் சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாக கட்டிட வளாகத்தில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram