ரேகாவை போலவே ரூபிணியும்...

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த ரூபிணி இப்போது மும்பையில் தொழில் அதிபராக இருக்கிறார்.
ரேகாவை போலவே ரூபிணியும்...
Published on

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த ரூபிணி இப்போது மும்பையில் தொழில் அதிபராக இருக்கிறார். இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த அவர், 1987-ல் கூலிக்காரன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.

ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.

1995-ம் ஆண்டில், மோகன்குமார் ராய்னா என்ற மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வாழ்ந்து வருகிறார். கடலோர கவிதை ரேகாவைப் போலவே இவருக்கும் ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார். இவரும் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com