சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இணையும் 2 முன்னணி நடிகைகள்?

சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் 2 நடிகைகள் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
Malavika Mohanan to join Megastar Chiranjeevi’s next?
Published on

சென்னை,

சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பராவில் திரிஷா மற்றும் மன சங்கர வர பிரசாத் கருவில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இதற்கிடையில், சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் 2 நடிகைகள் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சிரஞ்சீவியின் அடுத்த படத்தை வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய பாபி இயக்க உள்ளநிலையில், அதில் அவர் இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ராசி கன்னா என்றும் மற்றொருவர் மாளவிகா மோகனன் என்றும் கூறப்படுகிறது.

மாளவிகா மோகனன் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக "தி ராஜா சாப்" படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 அன்று வெளியாகவுள்ளது. மறுபுறம் ராசி கன்னா தற்போது தெலுசு கடா படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com