நானி 33 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நானியின் 33-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
image courtecy:twitter@NameisNani
image courtecy:twitter@NameisNani
Published on

சென்னை,

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. அதன் பின்னர் வெளியான 'தசரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு 32-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இது குறித்து 'நீங்கள் தலைவராக எந்த அடையாளமும் தேவையில்லை' என்ற வரியுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அதில் இப்படம் 2025-ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com