தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்-இயக்குநர் இரா. செழியன் காலமானார்

இவரது மறைவு திரையிலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinematographer R. Chezhiyan
Published on

சென்னை,

தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இரா. செழியன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையிலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கல்லூரி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர், 'பரதேசி' படத்துக்காக 2013-ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். அவர் இயக்கிய 'டூ லெட்' திரைப்படம் மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதை வென்றது. மேலும், திரைப்பட ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்ற 'உலக சினிமா' என்ற நூலையும் எழுதியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com