ஆம்பர் ஹேர்ட்-யின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கொடூரமானது - கோர்ட்டில் ஜானி டெப் பரபரப்பு சாட்சியம்

கடந்த சில நாட்களாக ஆம்பர்- ஜானி டெப் வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

வாஷிங்டன்,

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் ஜானி டெப். இவர் தனது 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல்அவரை கரம்பிடித்தார். பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு, ஜானி தன்னை திருமண வாழ்வின் போது கடுமையாகத் தாக்கியது உள்ளிட்ட அவரை பற்றி பல பரபரப்பு குற்றசாட்டுகளை அம்பெர் ஹெர்ட் 2018 ஆம் ஆண்டு முன்வைத்து இருந்தார். இதற்காக அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என ஆம்பர் ஹேர்ட் தெரிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து ஜானி டெப் பதிலுக்கு வழக்கு தொடர்ந்தார், அதில் "தனது புகழுக்கு களங்கம் விளைவித்தது உட்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் எனகூறி கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார்.

அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் ஆஜராகிய ஆம்பர் ஹேர்ட் மேலும் பல குற்றசாட்டுகளை ஜானி மீது முன்வைத்தார். ஜானி தன்னை முதல் முறையாக அறைந்தது குறித்து அவர் பேசுகையில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஜானி டெப் தன்னை பலமுறை உடல் ரீதியாக துன்புறுத்தியதை நீதிபதிகளிடம் அவர் கூறினார்.

இந்த நிலையில் கோர்ட்டில் நேற்று சாட்சியம் அளித்து பேசிய ஜானி டெப் கூறுகையில், "எந்த மனிதனும் முழுமையாக சரியானவன் இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒருபோதும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தை பிறருக்கு செய்ததில்லை.

என மீது ஆம்பர் ஹேர்ட் சுமத்தியுள்ள வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகளைக் கேட்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

இது போன்ற குற்றச்சாட்டுகள் கொடூரமானது, அபத்தமானது, அவமானகரமானது, கேலிக்குரியது, வேதனையானது, காட்டுமிராண்டித்தனமானது, கற்பனை செய்ய முடியாத மிருகத்தனமானது, மற்றும் அனைத்தும் பொய்யானது" என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com