

தீவிரவாதியாக மாறும் ஒரு இளைஞனால் குடும்பம் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.
அந்த குடும்பத்தினர் நாட்டுபற்று உள்ளவர்கள். குற்றமற்றவர்கள் என்று போராடும் கதாபாத்திரத்தில் டாப்சி நடித்துள்ளார். இந்த படத்தை பாகிஸ்தானில் வெளியிட அனுமதி கேட்டு அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாகிஸ்தானில் திரையிட அனுமதி மறுத்து விட்டனர். இதுபோல் ஏற்கனவே சில இந்தி படங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.