பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 350 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்!

வர்த்தக விவரங்களின் படி பொன்னியின் செல்வன் உலகளவில் ரூ 350 கோடிக்கு மேல் வசூலை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 350 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்!
Published on

சென்னை

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 7 நாட்களில் ரூ.350 நெருங்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் இப்போது உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூலை மதிப்பை நெருங்கி வருகிறது. தென்னிந்திய விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான ரமேஷ் பாலா, பொன்னியின் செல்வன் 1 தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்ததாக உறுதிப்படுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com