மீண்டும் சேட்டையை தொடங்கிய பூனம் பாண்டே

சமீபகாலமாக அமைதியாக இருந்த பூனம் பாண்டே மீண்டும் தனது சேட்டையை தொடங்கி விட்டார்.
மீண்டும் சேட்டையை தொடங்கிய பூனம் பாண்டே
Published on

பாலிவுட் கவர்ச்சி புயலான பூனம் பாண்டே அடிக்கடி தனது கிளுகிளுப்பூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தனது நிர்வாண புகைப்படங்களை அவர் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சாம் பாம்பேவை பூனம் பாண்டே திருமணம் செய்து கொண்டார். ஆனால் தேனிலவில் தனக்கு 'செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பதாக கணவர் மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

சமீபகாலமாக பூனம் பாண்டே அமைதியாக இருந்தார். கவர்ச்சி படங்களையும் அவர் வெளியிடாமல் இருந்து வந்தார். இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவரது முந்தைய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து மனதை தேற்றி கொண்டார்கள்.

இந்தநிலையில் அவர் மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட தொடங்கி விட்டார். குறிப்பாக மேலாடை அணியாத நிலையில் தனது அரை நிர்வாண போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார். பூனம் பாண்டே மீண்டும் தனது சேட்டையை தொடங்கி விட்டார். இனி என்ன ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com