

சென்னை,
நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். ‘முசாசி’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பிரபுதேவா, வடிவேலு ஏற்கனவே இணைந்து ''காதலன்'', ''எங்கள் அண்ணா'', ''மனதை திருடிவிட்டாய்'', ''மிஸ்டர் ரோமியோ'' போன்ற படங்களில் நடித்தனர். பிரபுதேவா இயக்கிய ''போக்கிரி'' மற்றும் ''வில்லு'' திரைப்படங்களில் வடிவேலு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒன்றாக நடித்து வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘பேங் பேங்’எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.