தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை; வடிவேல் நடிக்க தடையா?

வடிவேல் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை; வடிவேல் நடிக்க தடையா?
Published on


இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க வடிவேல் மறுத்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இம்சை அரசன் படத்தில் நடித்துக் கொடுக்கும்படி நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் வடிவேல் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு தேதி ஒதுக்கி நடித்து வருவதால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com