ரஜினியின் 170-வது படம் கதை கசிந்ததா?

ரஜினியின் 170-வது படம் கதை கசிந்ததா?
Published on

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கவுரவ வேடத்தில் வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தை முடித்து விட்டு சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இது ரஜினிக்கு 170-வது படம். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதர நடிகர் நடிகைகள் தேர்வும் நடக்கிறது.

இந்த நிலையில் ரஜினியின் 170-வது படம் உண்மை சம்பவம் என்றும் அந்த படத்தின் கதை கசிந்து விட்டதாகவும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது, ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். அப்போது என்கவுண்டரில் சிலர் கொல்லப்படுகின்றனர். இது நாடு முழுவதும் விவாதங்களை எழுப்புகிறது.

ரஜினிக்கு அது போலி என்கவுண்டர் என்றும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க களத்தில் இறங்குகிறார். அதில் வென்றாரா என்பது கதை என்று வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இதுதான் கதையா என்பதை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com