"ரெட்ரோ" படத்தின் 3-வது பாடலின் அறிவிப்பு வெளியீடு

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
"ரெட்ரோ" படத்தின் 3-வது பாடலின் அறிவிப்பு வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18-ந் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் 'ரெட்ரோ' படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். 'தி ஒன்' என்ற பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com