

சென்னை,
நடிகை ரோஜா செல்வமணி தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அதன் பிறகு அவர் அரசியலில் நுழைந்து வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் ஆனார். தெலுங்கில் அனைத்து நட்சத்திர ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் ரோஜா.
திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி-நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்சு மாலிகா. இவர் அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில் பெண்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம், 2025-ம் கல்வியாண்டுக்கான மவுரீன் பிக்கர்ஸ் என்ற தலைமைத்துவ விருதை அவருக்கு அறிவித்து இருக்கிறது. இந்த விருது கல்வி மற்றும் தொழில் முறை சிறப்பின் சேவையில் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்துவதில் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் மாணவி அன்சு மாலிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
உலகில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள் அணுகக்கூடிய தொழில்நுட்ப கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதில் மாணவி அன்சு மாலிகாவின் பணி மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. மேலும் அவருடைய தலைமை, தொலைநோக்கு, உலகளாவிய தாக்கம், தொழில்நுட்ப சமத்துவம் வாழ்க்கையை மாற்றும் மற்றும் அனைவருக்கும் கல்வி, தொழில்முறை வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கும் என்ற நம்பிக்கையும் இந்த விருதை அவர் பெற காரணமாக அமைந்துள்ளது.
View this post on Instagram