'கொம்புசீவி' பட முன்னோட்ட விழாவில் சரத்குமார் வைத்த முக்கிய கோரிக்கை!

'கொம்புசீவி' திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
'கொம்புசீவி' பட முன்னோட்ட விழாவில் சரத்குமார் வைத்த முக்கிய கோரிக்கை!
Published on

சென்னை,

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார், தார்னிகா, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில், பொன்ராம் இயக்கியுள்ள கொம்புசீவி' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முகேஷ் டி.செல்லையா தயாரித்துள்ளார்.

சென்னையில் நடந்த படவிழாவில் சரத்குமார் பேசும்போது, ஒரு படத்தை தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பதே சரி. என்னதான் ஓ.டி.டி. தளங்கள் இருந்தாலும், படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

ஆனாலும் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என்று தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் சொல்வது வேதனையளிக்கிறது. எனவே 30 நாட்களுக்கு பிறகு ஓ.டி.டி.க்கு படம் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையை மக்கள் மாற்றிட வேண்டும்.

எனவே ஒரு திரைப்படம் வெளியான பிறகு குறைந்தது 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய பின்னரே ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட வேண்டும். இதை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு கோரிக்கையாக வைக்கிறேன். அதேபோல கலையுலகம் வாழவேண்டும் என்றால் மக்களும் தியேட்டர்களுக்கு சென்று படங்களை பார்த்து ஆதரவு தரவேண்டும்'', என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com