

சென்னை,
பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் ‘சர்கார்’ மற்றும் ‘தர்பார்’ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய். இவர் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து “அக்கடி கொழுத்து பக்கடி” என்ற பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலை தேவா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” பாடல் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை பாரதியாரின் வரிகளுடன் இணைத்து மதுரை சோல்ஜர், கிரிஷ் ஜி இணைந்து எழுதியுள்ளனர். கிரிஷ் ஜி, மதுரை சோல்ஜர் இணைந்து பாடியுள்ளனர்.