

பெங்களூரு,
காவிரி போராட்டம் எதிரொலியால் பெங்களூரு, சாம்ராஜ்நகர் உள்பட பல நகரங்களில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த திரைப்படம் தொடர்பான பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிரச்சினையில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மண்டியாவில் நேற்று முன்தினம் விஜய் சேனா கன்னட அமைப்பினர், தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்ற பெயரை மாற்றி சொல்லும்போது, அதே பொருளை கொண்ட மற்றொரு வடிவில் குறிப்பிடலாம்.ய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' படம் திரையிடப்பட்ட தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பேனர்களை கிழித்து எறிந்தனர். இதையடுத்து அந்த தியேட்டரில் ‘ஜனநாயகன்' படம் நிறுத்தப்பட்டது.
அதுபோல் சாம்ராஜ்நகர் டவுனில் பசவரேஸ்வரா தியேட்டரிலும் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது. நேற்று காலை அந்த தியேட்டரை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தியேட்டரிலும் 'ஜனநாயகன்' படம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே காவிரி போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் பெங்களூருவில் ஊர்வசி, பூர்ணிமா, அஞ்சன் உள்ளிட்ட பல தியேட்டர்களிலும் 'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று முதல் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. அத்துடன் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த பேனர்கள், கட்-அவுட்டுகள், போஸ்டர்களும் அகற்றப்பட்டு வருகிறது. ராமநகர், மைசூரு, சிவமொக்கா உள்பட பல நகரங்களிலும் ஜனநாயகன் திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் 55 மல்டிபிளக்ஸ், 100 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. தற்போது காவிரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் பல தியேட்டர்களில் அந்த படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.