பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் மருத்துவமனையில் அனுமதி
Published on

வாஷிங்டன்,

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசைன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜாகிர் உசைனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவர் இன்று தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com