பெப்சிக்கு எதிராக வழக்கு போட்ட தமிழ் திரைப்பட சங்கம்

பெப்சிக்கு எதிராக தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக பெப்சி குற்றம் சாட்டியது.
Tamil Film Association files case against FEPCI
Published on

சென்னை,

பெப்சிக்கு எதிராக தமிழ திரைப்பட சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி பெப்சி குற்றம் சாட்டியது.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் ஒத்துளைப்பு வழங்கக்கூடாது என்றும் பெப்சி அமைப்பில் உறுப்பினர்களுக்கு பெப்சி கடந்த 2-ம் தேதி கடிதம் எழுதியதது.

இந்நிலையில், இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டதாக கூறி , தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் , புதிதாக துவங்கப்பட்டுள்ள தொழிலாலர் சம்மேளனத்திற்கும் திரைப்பட தயாரிப்பு சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி பெப்சி நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்க மறுத்திருப்பது சட்ட வீரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்பு பணிகள் முடங்கி பெரிய அளவில் நிதியிழப்பு எற்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தபடி படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை எந்த வித இடையூறும் இல்லாமல் முடித்துகொடுக்கும் படி பெப்சி அமைப்பிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் படப்பிடிப்பு பணிகளில் தலையிட பெப்சி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு , மே 7-ம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com