தமிழ்நாட்டின் தகுதியான 'பேச்சிலர்' சிம்பு - சித்தி இட்னானி

தமிழ்நாட்டின் தகுதியான ‘பேச்சிலர்' சிம்புதான் என்று நடிகை சித்தி இட்னானி அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தகுதியான 'பேச்சிலர்' சிம்பு - சித்தி இட்னானி
Published on

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்து இருக்கிறார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம், "காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், "அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தகுதியான 'பேச்சிலர்' சிம்புதான் என்று. எனவே காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com