நடிகையான ஆசிரியை

நடிகையான ஆசிரியை
Published on

விஜய் சேதுபதியின் ``யாதும் ஊரே யாவரும் கேளிர்'' படத்தில் நடித்தவர் மதுரா. ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் வக்கீலுக்கு படித்து, அங்குள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்று கிறார். பரத நாட்டியம், கர்நாடக சங்கீதமும் கற்றுள்ளார்.

மதுரா கூறும்போது, ``என் அம்மா இலங்கை யாழ்ப்பாண தமிழ் பெண். அப்பா ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்தேன், தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன். `யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனைகளையும் சொல்லும் கதை என்பதால், என்னால் உணர்வுப்பூர்வமாக புரிந்து கொண்டு நடிக்க முடிந்தது. அந்த படத்தில் நடித்தது பெருமை'' என்றார். தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com