சிவகார்த்திகேயன் குரலில் “தாய் கிழவி” படத்தின் முதல் பாடல் வெளியானது

ராதிகா நடித்துள்ள‘தாய் கிழவி’ படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் குரலில் “தாய் கிழவி” படத்தின் முதல் பாடல் வெளியானது
Published on

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் வட்டிக்கு விடும் பவுன் தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ‘தாய் கிழவி’ வரும் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. ‘தாய் கிழவி’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘தாய் கிழவி’படத்தின் ‘தாய் கிழவி வாரா..’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள இப்பாடலை கருமாத்தூர் மணிமாறன் எழுதியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com