சூர்யாவை நெகிழ வைத்த கதாபாத்திரம்

ஜெய்பீம் படத்தில் நான் நடித்த வக்கீல் சந்துரு வேடம் எனது சினிமா பயணத்தில் முக்கிய மைல்கல் கதாபாத்திரம்‘‘ என்று சூர்யா கூறியுள்ளார்.
சூர்யாவை நெகிழ வைத்த கதாபாத்திரம்
Published on

சூர்யா நடித்த ஜெய்பீம் படம் கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் அள்ளியது. இதில் லிஜோ மோல், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். ஞானவேல் இயக்கி இருந்தார். தற்போது ஜெய்பீம் வெளியாகி ஒரு வருடம் ஆவதையொட்டி சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், ''ஜெய்பீம்' படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய்பீம் திரைக்கதையாக இருந்து திரைப்படமாக உருவாகி இன்று வரை அதிக வலிமையானதாக மாறி வருகிறது. இப்படி ஒரு அர்த்தமுள்ள படத்தை கொடுத்த சகோதரர் ஞானவேல் மற்றும் அவரது குழுவினருக்கு எனது நன்றி. ஜெய்பீம் படத்தில் நான் நடித்த வக்கீல் சந்துரு வேடம் எனது சினிமா பயணத்தில் முக்கிய மைல்கல் கதாபாத்திரம்'' என்று கூறியுள்ளார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாலா இயக்கும் வணங்கான், வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com