"ரூ.500 சம்பளத்தில் இருந்த சந்தோஷம் கோடிகளில் வாங்கும் போது இல்லை!" - அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசியது வைரலாகி இருக்கிறது.
"ரூ.500 சம்பளத்தில் இருந்த சந்தோஷம் கோடிகளில் வாங்கும் போது இல்லை!" - அனிருத்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அனிருத், தமிழ் தாண்டி இதர தென்னிந்திய மொழிகளிலும் அசத்தி வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனிருத் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசியது வைரலாகி இருக்கிறது.

அதில், "சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது ரூ.500 சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் மனதில் ஏற்படும். சில நிகழ்வுகளில், சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.

இப்போது கோடிகளில் சம்பளம் மாறிவிட்டது. பரபரப்பாக இசைப்பணியில் மூழ்கி கிடந்தாலும், முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அந்த சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது" என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com