ஆலியா, தீபிகா இல்லை...இந்தியாவின் அதிக வசூல் செய்த படத்தை கொடுத்த 16 வயது நடிகை

ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகைகள் நடிக்காமல் உருவாகிய திரைப்படம் ஒன்று அதிக வசூலை பெற்றது
Published on

சென்னை,

பாலிவுட்டில் பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவ்வாறு உருவான பல படங்கள் உலகளவில் பாராட்டுகளை பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகைகள் நடிக்காமல் குறைவான பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் ஒன்று பல இதயங்களை வென்றது மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் அதிக வசூலையும் பெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்.

ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், உலகம் முழுவதும் சுமார் 912 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த படத்தின் முன்னணி நடிகை இரண்டு ஹிட் படங்களில் நடித்த பிறகு பாலிவுட்டை விட்டு வெளியேறினார். அந்த படம்தான் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். கடந்த 2017-ல் வெளியான இப்படத்தில் அப்போது 16 வயதே ஆன ஜைரா வாசிம் முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் அமீர்கான், மெஹர் விஜ் மற்றும் ராஜ் அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் பார்வையாளர்களிடமிருந்து பெரிய அளவில் அன்பைப் பெற்றது. மேலும், இது இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாகவும் உள்ளது.

சீக்ரெட் சூப்பர் ஸ்டாரின் வெற்றியைத் தொடர்ந்து, பிரியங்கா சோப்ரா மற்றும் பர்ஹான் அக்தருடன் இணைந்து தி ஸ்கை இஸ் பிங்க் படத்தில் நடித்தார் ஜைரா வாசிம். இருப்பினும், இந்த படம் வெளியாவதற்கு முன்பே, பாலிவுட்டை விட்டு விலகுவதாக ஜைரா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com