இஸ்ரேல் – ஈரான் போருக்கு இரண்டு விளைவுகள் உண்டு- வைரமுத்து வேதனை

போர் என்பது விலை உயர்ந்ததல்ல மலிவான பொருள் என்பதை இந்தப் போர் உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் போருக்கு இரண்டு விளைவுகள் உண்டு- வைரமுத்து வேதனை
Published on

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் போர் சூழல் உலகளவில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த போரின் விளைவுகள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"இஸ்ரேல் – ஈரான் போருக்கு

இரண்டு விளைவுகள் உண்டு

ஒன்று

நிகழ்கால விளைவுகள்

இரண்டு

நெடுங்கால விளைவுகள்

ஹோர்முஸ் நீரிணையின்

போக்குவரத்து

70விழுக்காடு குறைந்துவிடும்

மொத்தத்தில்

16.2 லட்சம் கோடியை

மத்திய கிழக்கு இழக்கும்

36லட்சம் பேர்

வேலை இழப்பர்

40லட்சம் பேர்

வறுமையின் பதுங்கு குழிக்குள்

ஒதுங்குவர்

போர் என்பது

விலை உயர்ந்ததல்ல

மலிவான பொருள் என்பதை

இந்தப் போர் உலகுக்குக்

காட்டிக் கொடுத்துவிடும்

1800கோடி

இஸ்ரேல் ஏவுகணையை

50ஆயிரம் ரூபாய்

ஈரானிய ட்ரோன்

பிரித்து மேய்ந்துவிட்டதே

இதற்கு சாட்சி

பெட்ரோலின்

துணைப்பொருளான

உர விநியோகத்தின் கட்டுப்பாடு

ஆசியாவின் உணவுத்

தட்டுப்பாட்டில் முடியும்

இந்தப் போரின்

உடன்விளைவாக

பல நாடுகளிலும்

பாழ்செய்யும் பல்குழுக்கள்

தோன்றக் கூடும்

பல நாடுகளில்

தெருச் சண்டைகள்

கடைகளில் விற்கும்

விலைவாசியும் பஞ்சமும்

அறங்களை உடைக்கும்

சமூக மனிதன்

சுயநலப் பூச்சியாவான்

இனி நெடுங்கால

விளைவுகளைப் பார்ப்போம்

பிற நாடுகளை

ஒரு நாடு கட்டுப்படுத்தும்

வல்லாதிக்கம் ஒழியக்கூடும்

அதிகார அப்பத்தை

நாடுகள் பங்கிட்டுக்கொள்ளும்

குழந்தைகள் மனதில்

பொத்திவைத்த புழுக்கம்

கால்நூற்றாண்டுக்குப் பிறகு

சமூக வன்முறைகளாய்

வெவ்வேறு வடிவில் வெடிக்கும்

ஈரானைவிட்டு வெளியேறிய

அறிவார்ந்த கூட்டம்

உலகமெங்கும்

கண்ணுக்குத் தெரியாத

பாரசீகக் கலாசாரச் சந்தையை

உருவாக்கும்

ஒரே ஒரு நல்லது நடக்கும்

எண்ணெய்ச் சார்பைவிட்டு

இந்த உலகத்தை

விடுவிக்கும் விஞ்ஞானத்தை

வெவ்வேறு மூளைகள்

ஒரே மாதிரி சிந்திக்கும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com