

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது 'மகுடம்' திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'மகுடம்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்தபோது நடந்த உரையாடல் குறித்து பேசியுள்ளார். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழா தொடர்பாக முதலமைச்சரிடம் தெரிவித்த கருத்துகளை அவர் நினைவுகூர்ந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திறப்பு விழா கல்வெட்டில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற உள்ளது.
இதுகுறித்து பேசிய விஷால், "நடிகர் சங்க கட்டடத்தின் கல்வெட்டில் யார் யாரே பெயர் இடம்பெறும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இறுதியாக பார்த்தபோது, 'C. Joseph Vijay' என்ற பெயர்தான் அந்த கல்வெட்டில் இடம்பெறப் போகிறது. அந்தக் கட்டடம் இன்னும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும். அதனால் அந்த கல்வெட்டில் இடம்பெறும் உங்கள் பெயரும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாறாக இருக்கும் என்று முதலமைச்சரிடம் கூறினேன்" என்றார்.
கல்வெட்டில் பெயர் இடம்பெறுவது என்பது மிகப்பெரிய பெருமை என்றும், அது பல தலைமுறைகளுக்கு வரலாற்றுச் சான்றாக இருக்கும் என்றும் விஷால் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.