'பராசக்தி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணி தொடக்கம்!


பராசக்தி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணி தொடக்கம்!
x
தினத்தந்தி 18 July 2025 6:25 AM IST (Updated: 5 Aug 2025 9:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று பொள்ளாச்சியில் தொடங்க உள்ளன. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'மதராஸி' படத்தின் சில காட்சிகளை நடித்துக் கொடுப்பதற்காக சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அதனை முடித்து விட்டு மீண்டும் பராசக்தி படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

1 More update

Next Story