

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வரும் ஆஷிகா ரங்கநாத், தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். 'கிரேசி பாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் 'விஸ்வம்பரா', 'காதவைபவா' உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் அதர்வாவுடன் 'பட்டத்து அரசன்', சித்தார்த்துடன் 'மிஸ் யூ' ஆகிய படங்களில் நடித்துள்ள ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் அவர் நடித்துள்ள பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்த நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேட்பதாக கூறிய ஆஷிகா ரங்கநாத், அதற்கு எளிமையான பதிலை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "உங்கள் அழகின் ரகசியம் என்ன? என்று பலரும் கேட்கிறார்கள். நான் இயற்கையை நேசித்து ரசிப்பதால்தான் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இறைவனும் இயற்கையும் எனக்குக் கொடுத்த அழகை பாதுகாத்து வருகிறேன். அவ்வளவுதான்," என்று தெரிவித்துள்ளார்.
ஆஷிகா ரங்கநாத்தின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயற்கை மீது கொண்ட காதலையும், எளிமையான வாழ்க்கை முறையையும் அவர் வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.