

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
திருச்சியில் மக்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை நடத்தினார் முதல்-அமைச்சர் விஜய். அதில் அவர் பேசிய விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. திருச்சி நிகழ்ச்சியில் விஜய் பேசிய ஒரு விஷயம் பெண்களை விமர்சிக்க வைத்திருக்கிறது.
“கவர்ச்சியில் மயங்கி மக்கள் எனக்கு ஓட்டு போட்டிருக்கிறார்களாம். நான் என்ன” என்று விஜய் பேசியபோது உடல்மொழியை கவனித்தபோது தோன்றியது. அவர் வாய்திறந்து சொல்லவில்லையே தவிர அவர் சொல்லவந்தது என்னவென பார்ப்போருக்கு புரிந்தது. மாண்புமிகு முதல்-அமைச்சர் பதவிக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. இத்தனை தரம்தாழ்ந்து ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தீயசக்தி, தூரசக்தி, பாரசக்தி, தூர்ந்துபோன சக்தி என்றெல்லாம் எழுதிக்கொடுத்த ரைமிங் வசனங்களைப் பேசுபவர், அந்த சக்திக்கு வாக்களித்த மக்களின் வாக்குகளால்தான் தன் ஆட்சி நடக்கிறது என்கிற குற்றவுணர்ச்சியோ சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு குறித்த விமர்சனங்கள் பற்றிய பொறுப்புணர்ச்சியோ இல்லை. அ.தி.மு.கவின் ஒரு தரப்பு வாக்குகளை சட்டமன்றத்தில் வாங்கிக்கொண்டு ‘மற்றும் பலர்’ என்று இன்னும் கிண்டலடிப்பது வக்கிரத்தின் உச்சம்.
இந்நிலையில் நடிகை ரோகிணி விஜய் பேச்சு பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கவர்ச்சி மெட்டீரியலாக நடிகைகள், பெண்களை நாங்கள் பயன்படுத்தவில்லை ஐயா. Film charishma என்கிற அர்த்தத்தில் தான் பெரும்பாலானவர்கள் சினிமா கவர்ச்சி என்கிற பதத்தை பயன்படுத்தினார்கள். என் தரம் இவ்ளவு தான் என்று நீங்களே நிர்ணயிக்கிறீர்கள். என்ன செய்ய? பாவம் இவருடன் நடித்த தமிழ் நடிகைகள்..அவர்களுக்கு எல்லாம் ஆழந்த அனுதாபங்கள்... தற்போது பாவம் இவருக்காக வாதாடுபவர்களும், தமிழக மக்களாகிய நாமும்” என தெரிவித்துள்ளார்.