'கலகலப்பு 3' படத்துக்கு தயாராகும் சுந்தர் சி

சுந்தர். சி இயக்க உள்ள ‘கலகலப்பு 3' படத்தில் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கலகலப்பு 3' படத்துக்கு தயாராகும் சுந்தர் சி
Published on

சென்னை,

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சுந்தர் சி. சமீபத்தில் இவரது இயக்கம், தயாரிப்பு, மற்றும் நடிப்பில் வெளியானது அரண்மனை 4 படம். இந்த படத்தில் சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூலில் சிறப்பாக அமைந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சுந்தர். சி இயக்க உள்ள 'கலகலப்பு 3' படத்தில் நாயகியாக நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டில் கலகலப்பு படம் ரிலீசானது. இந்த படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற சூழலில் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படமும் சிறப்பாக அமைந்தது.

இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கலகலப்பு மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com