விஷாலின் 34-வது படத்தை இயக்கும் ஹரி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!

விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஷாலின் 34-வது படத்தை இயக்கும் ஹரி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!
Published on

சென்னை,

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து விஷால் தற்போது 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஷாலின் 34-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ஹரி இயக்கத்தில் 'தாமிரபரணி', 'பூஜை' உள்ளிட்ட படங்களில் விஷால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com